வணிகம்

தமிழகத்தில் ரூ.500 கோடி முதலீடு - ‘எட்ஜ் ஏஐ’ மையம் தொடங்கியது எம்பெட்யூஆர் சிஸ்டம்ஸ்

செய்திப்பிரிவு

சென்னை: அமெரிக்​கா​வின் சிலிக்​கான் வேலியைத் தலைமையிட​மாகக் கொண்டு செயல்​பட்டு வரும் எம்​பெட்​யூஆர் சிஸ்​டம்​ஸ், எம்​பெடட் சிஸ்​டம்ஸ் மற்​றும் எட்ஜ் ஏஐ தீர்​வு​களை வழங்​கு​வ​தில் முன்​னணி​யில் உள்​ளது.

இந்த நிறு​வனத்​தின் நிறு​வனரும், தலை​மைச் செயல் அதிகாரியுமான ராஜேஷ் சுப்​ரமணி​யம் கூறிய​தாவது: சர்​வ​தேச அளவில் எட்ஜ் ஏஐ தளங்​களை உரு​வாக்​கு​வ​தில் சென்னை மற்​றும் தமிழகம் ஒரு முக்​கிய மைய​மாகத் திகழ்கிறது.

          

இங்​குள்ள சிறந்த தொழில்​ நுட்​பத் திறமை மற்​றும் நிலை​யான கொள்​கை​யால் நிறு​வனத்​தின் அடுத்​தகட்ட வளர்ச்​சி​யாக ‘மாடல்​நோ​வா’ மற்​றும் ‘ஃபியூஷன் ஸ்டுடியோ’ மென்​பொருளை அறிமுகம் செய்​துள்​ளது. இதற்​காக சென்​னை​யில் 100 பொறியாளர்​கள் பணி​யாற்​றும் வகை​யில் பிரத்​யேக ‘எட்ஜ் இன்​டெலி ஜென்​ஸ்’ ஆய்வு மையத்தை நிறு​வனம் அமைத்​துள்​ளது.

தற்​போது இந்​நிறு​வனத்​தில் 400 பொறி​யாளர்​கள் பணி​யாற்றி வரும் நிலை​யில், 2026-க்​குள் இந்த எண்​ணிக்​கையை 550-க்​கும் மேலாக உயர்த்​தத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக ஏஐ/எம்​எல், தரவு அறி​வியல், சிஸ்​டம் ஆர்க்​கி டெக்ட்ஸ் நிபுணர்​களுக்கு முன்னுரிமை அளிக்​கப்பட உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT