வணிகம்

கனரா-சிண்டிகேட் இணைப்புக்கு பின் 160% வளர்ச்சி: நூற்றாண்டு விழாவில் துணை பொது மேலாளர் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: க​னரா - சிண்​டிகேட் வங்​கி​களின் இணைப்​புக்கு பின் வங்​கி​யின் வளர்ச்சி 160 சதவீதம் உயர்ந்​திருப்​ப​தாக, சென்​னை​யில் நடை​பெற்ற சிண்​டிகேட் வங்​கி​யின் நூற்​றாண்டு விழா​வில், கனரா வங்கி துணை பொது மேலா​ளர் ராகவேந்​திரா ராவ் தெரி​வித்​தார்.

அகில இந்​திய சிண்​டிகேட் வங்கி ஓய்​வூ​தி​யர் கூட்​டமைப்​பின் தமிழ்​நாடு மாநிலக் குழு சார்​பில், சிண்டிகேட் வங்கி நூற்​றாண்டு விழா, சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

கூட்​டமைப்​பின் மாநிலக் குழு தலை​வர் கே.ஆர்​.லாரன்ஸ் தலைமை தாங்​கி​னார். சிண்​டிகேட் வங்​கி​யின் முன்​னாள் பொது​மேலா​ளர் பி.சந்​தான கிருஷ்ணன், கனரா வங்​கி​யின் துணை பொது மேலா​ளர் ராகவேந்​திரா ராவ் கனலா, கூட்​டமைப்​பின் சேர்​மன் கே.உமேஷ் நாயக் ஆகியோர் சிறப்​புரை​யாற்​றினர்.

விழா​வில், 75 வயதை கடந்த 50 பேர் கவுரவிக்​கப்பட்​டனர். முன்​ன​தாக, கனரா வங்கி துணை பொது மேலா​ளர் ராகவேந்​திரா ராவ் பேசுகை​யில், “சிண்​டிகேட் வங்​கி​யுடன் கனரா வங்கி இணைக்​கப்​பட்​டது ஒரு நிச்​ச​யிக்​கப்​பட்ட திரு​மணம் போன்​றது.

இணைப்​புக்கு முன் ரூ.15 லட்​சம் கோடி​யாக இருந்த நம் வர்த்​தகம், 2025 செப்​டம்​பர் மாத நில​வரப்​படி தற்​போது ரூ.26.78 லட்​சம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது. வணி​கம் பன்​மடங்கு பெரு​கி​யுள்​ளது.

அதே​போல், செப்​டம்​பர் 2020-ல் வங்​கி​யின் லாபம் ரூ.440 கோடி​யாக இருந்​தது. ஆனால், 2025 செப்​டம்​பர் மாத நில​வரப்​படி, ரூ.4,700 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. அந்த வகை​யில், கனரா - சிண்​டிகேட் வங்​கி​களின் இணைப்​புக்கு பின் வணி​கம் 160 சதவீதம் வளர்ச்​சி​யடைந்​துள்​ளது” என்று தெரி​வித்​தார்.

இந்​நிகழ்​வில், கூட்​டமைப்​பின் தலை​வர் அப்​துல் ஜலீல், பொதுச் ​செய​லா​ளர் எம்​.எஸ்​.பட், துணைத்தலை​வர் இ.ரஞ்​சனி, இணைச் செய​லா​ளர் ஏக்​நாத் காம்ப்​ளே, மாநில செய​லா​ளர் கோபால​கிருஷ்ணன், மாநில பொருளாளர் இளங்​கோவன், குழு தலை​வர் கே.ஆர்​.லாரன்ஸ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT