வணிகம்

பிஎம்டபிள்யூ கார்களை வாங்கும் சர்ச்சைக்குரிய டெண்டர் ரத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஊழல் தடுப்பு அமைப்​பான லோக்​பால், 7 சொகுசு கார்​களை வாங்​கு​வதற்​கான சர்ச்​சைக்​குரிய டெண்​டரை ரத்து செய்​துள்​ளது.

இதுகுறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: அக்​டோபர் 16, 2025 அன்று, சுமார் ரூ.5 கோடி மதிப்​புள்ள 7 பிஎம்​டபிள்யூ 3 சீரிஸ் 330Li ‘எம் ஸ்போர்ட்' கார்​களை வழங்​கு​வதற்​கான சர்ச்​சைக்​குரிய டெண்​டர் வெளி​யிடப்​பட்​டிருந்​தது.

உயர்தர வாக​னங்​களைக் கொள்​முதல் செய்​வதற்​கான லோக்​பாலின் இந்த முடிவை எதிர்க்​கட்​சிகளும், சமூக ஆர்​வலர்​களும் கடுமை​யாக விமர்​சித்​திருந்​தனர். இந்நிலை​யில், இரண்டு மாதங்களுக்​குப் பிறகு இந்த டெண்​டர் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் ஜெய்​ராம் ரமேஷ், சொகுசு கார் வாங்​கும் லோக்​பால் அமைப்​பின் முடிவை கடுமை​யாக விமர்​சித்​திருந்​தார். இது சாமானிய மக்​களின் அமைப்பா அல்​லது ஆடம்பர பிரியர்​களின் அமைப்பா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதேபோன்​று, முன்​னாள் நிதி ஆயோக் தலை​மைச் செயல் அதி​காரி அமி​தாப் காந்​தும், லோக்​பால் இந்த டெண்​டரை ரத்து செய்​து​விட்டு இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட மின்​சார வாகனங்​களைத் தேர்ந்​தெடுக்க வேண்​டும் என்று கோரிக்கை விடுத்​திருந்​தார்.

SCROLL FOR NEXT