வணிகம்

2024-ல் பிரிக்ஸ் நாடுகளின் ஏற்றுமதி ரூ.5.74 லட்சம் கோடியாக உயர்வு

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடு​களின் ஏற்​றுமதி 2024-ல் ரூ.5.74 லட்​சம் கோடி​யாக உயர்ந்​த​தாக மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் தெரிவித்​தார்.

பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 18-வது உச்​சி​மா​நாடு டெல்​லி​யில் உள்ள பாரத் மண்​டபத்​தில் இன்​றும், நாளை​யும் நடக்​கிறது. இந்த மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக பிரிக்ஸ் வர்த்தக மன்​றம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் பேசி​ய​தாவது: இது​வரை நடை​பெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்​றங்​களி​லேயே இது​தான் மிகப்​பெரியது.

உலகளா​விய மதிப்பு சங்​கி​லிகளைப் பாதிக்​கும் விஷயங்கள், விவ​சா​யம் மற்​றும் வேளாண் தொழில்​நுட்​பங்​கள், சேவை வர்த்​தகம், பெண்​கள் தலை​மையி​லான நிறு​வனங்​கள் மற்​றும் டிஜிட்​டல் பொருளா​தா​ரம் போன்ற துறை சார்ந்த பிரச்​சினை​களை இந்த மன்​றம் விவா​தித்​தது.

உலகளா​விய ஏற்​றும​தி​யில் பிரிக்ஸ் நாடு​களின் பங்கு கிட்​டத்​தட்ட இரட்​டிப்​பாகி, சுமார் 24 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது. பிரிக்ஸ் நாடு​களின் ஏற்​றும​தி, 2003-ல் சுமார் 900 பில்​லியன் அமெரிக்க டால​ராக(ரூ.8,618 கோடி) இருந்த நிலை​யில், 2024-ல் 6 டிரில்​லியன் அமெரிக்க டால​ராக (ரூ.5.74 லட்​சம் கோடி) உயர்ந்​தது. இது அதன் சந்​தை​யின் அளவை​யும் ஆற்​றலை​யும் பிர​திபலிக்​கிறது.

SCROLL FOR NEXT