வணிகம்

கும்​பகோணத்​தில் பித்தளை பானை தயாரிப்பு பணிகள் தீவிரம்

பொங்​கல் பண்​டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை

சி.எஸ். ஆறுமுகம்

கும்​பகோணம்: பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு கும்பகோணத்​தில் பித்​தளை பானை தயாரிப்​புப் பணி​கள் தீவிரமடைந்​துள்​ளன.

பொங்​கல் பண்​டிகையன்று பெரும்​பாலானவர்​கள் மண் பானையில் பொங்​கல் வைப்​பது வழக்​கம். ஆனால், சிலர் பித்தளை பானை​களில் பொங்​கல் வைப்​பதும் வழக்​க​மாக உள்ளது. பொங்​கல் பண்​டிகைக்கு இன்​னும் ஒரு மாதமே உள்ள நிலை​யில் கும்​பகோணத்​தில் பித்​தளை பொங்​கல் பானை தயாரிப்பு பணி​கள் தீவிரமடைந்​துள்​ளன.

பொங்​கலை​யொட்​டி, கும்​பகோணத்​தில் உள்ள அனைத்து மொத்த மற்​றும் சில்​லறை விற்​பனை கடைகளில் பித்​தளை பானை​களை பல்​வேறு வடிவங்களில் வடிவ​மைத்து குவித்து வைத்​துள்​ளனர். ஆனால் மூலப்​ பொருட்​களின் விலை உயர்​வால் அதன் விலை உயர்ந்துள்ள​தாக வியா​பாரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து கும்​பகோணம் பித்​தளை பாத்​திர வியா​பாரி​கள் சங்கச் செய​லா​ளர் ராமலிங்​கம் கூறிய​தாவது: கும்​பகோணம் மற்றும் அதன் சுற்று வட்​டாரப்​ பகு​தி​களில் 110 பித்​தளை பட்டறைகள், 75 மொத்த விற்​பனை கடைகள், 100-க்​கும் மேற்​பட்ட சில்​லறை விற்​பனை கடைகள் உள்​ளன. 5 ஆயிரத்​துக்​கும் மேற்பட்டோர் நேரடி​யாக​வும், மறை​முக​மாக​வும் இந்த தொழிலில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இங்கு வடிவ​மைக்​கப்​படும் பித்​தளை பாத்​திரங்​கள், தமிழகம் முழு​வதும் மட்​டுமல்​லா​மல் வெளி மாநிலங்​களுக்​கும் அனுப்பப்பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், பித்​தளை பாத்திரங்களுக்கு மூலப்​பொருளாக விளங்​கும் காப்​பர் மற்​றும் துத்​த​நாகத்​தின் விலை சுமார் 30% உயர்ந்​துள்​ளது. இதனால், ரூ.900-க்கு விற்​கப்​பட்ட 1 கிலோ பித்​தளை பாத்​திரங்​கள், தற்போது ரூ.1,100-க்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது.

பழங்​காலங்​களில் கூட்​டுக்​குடும்​ப​மாக வசித்து வந்​தனர். அப்போது பெரிய பித்​தளை பானை​களை வாங்கி கூட்​டாக பொங்கலிட்டு கொண்​டாடினர். இப்​போது, பெரும்​பாலானோர் தனிக்​குடித்​தனம் சென்​று​விட்​ட​தால், அவர்​கள் சில்​வர் பானையிலேயே குறைந்த அளவில் பொங்​கல் வைத்​துக் கொண்டாடி வரு​கின்​றனர்.

இருப்​பினும், கிராமப் ​புற மக்​கள், வசதி படைத்​தவர்​கள், இன்​னும் மகள் வீட்​டுக்கு பொங்​கல் சீதனமாக பித்​தளை பானை​களை சீர்​வரிசை​யாக வழங்கி வருகின்​றனர்​. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT