வணிகம்

கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நிம்மதி: நிலுவைத் தொகை செலுத்த 3 நாட்கள் சலுகை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இன்​றைய கால​கட்​டத்​தில் கிரெடிட் கார்​டு​களின் பயன்​பாடு அத்​தி​யா​வசி​யத் தேவை​யாக மாறி​யுள்ள நிலை​யில், அவற்​றுக்​கான நிலு​வைத் தொகையை குறிப்​பிட்ட காலத்​திற்​குள் செலுத்​து​வ​தில் பலரும் சிக்​கல்​களை எதிர்​கொள்​கின்​றனர். இத்​தகைய பயனர்​களுக்கு உதவும் வகை​யில், ரிசர்வ் வங்கி விதி​களில் முக்​கிய மாற்​றங்​களை மேற்​கொண்​டுள்​ளது.

அதன்​படி, கூடு​தல் அவகாசம் மற்​றும் குறைந்த கட்​ட​ணம் ஆகிய சலுகைகள் கிரெடிட் கார்டு வாடிக்​கை​யாளர்​களுக்கு வழங்​கப்பட உள்​ளன. ரிசர்வ் வங்​கி​யின் புதிய விதி​முறை​களின்​படி, நிர்​ண​யிக்​கப்​பட்ட கடைசி தேதிக்கு பிறகு, அபராதக் கட்​ட​ணம் உடனடி​யாக விதிக்​கப்​ப​டாது. கிரெடிட் கார்​டுக்​கான பணம் செலுத்த வாடிக்​கை​யாளர்​களுக்கு பில்​லில் குறிப்​பிடப்​பட்ட தேதி​யைக் காட்​டிலும் கூடு​தலாக மூன்று நாட்​கள் அவகாசம் வழங்​கப்​படும்.

உதா​ரண​மாக, ஒரு​வரது நிலு​வைத் தொகை​யைச் செலுத்த வேண்​டிய கடைசித் தேதி மே 5 என்​றால், அவர் எவ்​வித அபராத​மும் இன்றி மே 8-ம் தேதி வரை கிரெடிட் கார்டு பில்லை செலுத்​தலாம். மற்​றொரு முக்​கிய மாற்​ற​மாக, தாமதக் கட்​ட​ணம் இனி முழுத் தொகைக்​கும் விதிக்​கப்​ப​டாது. மாறாக, செலுத்​தப்பட வேண்​டிய மீத​முள்ள நிலு​வைத் தொகைக்கு மட்​டுமே அது கணக்​கிடப்​படும்.

மூன்று நாள் காலக்​கெடு​வுக்​குப் பிறகும் பணம் செலுத்​தத் தவறி​னால், அது நிலு​வை​யாகக் கருதப்​பட்டு ஒரு​வரின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்​கப்பட வாய்ப்​புள்​ளது. இந்த விதி முறை​கள் அடுத்த ஆண்டு ஏப்​ரல்​ 1-ம்​ தேதி முதல்​ அமலுக்​கு வர உள்​ளன.

SCROLL FOR NEXT