வணிகம்

200 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் மிகுந்த அவதி

Ellusamy Karthik

புதுடெல்லி: இண்​டிகோ நிறு​வனத்​தின் 200 விமானங்​கள் நேற்று ரத்து செய்​யப்​பட்​ட​தால் பயணி​கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

இந்​தி​யா​வின் மிகப்​பெரிய விமான நிறு​வன​மான இண்​டிகோ, சமீபத்​திய ஆண்​டு​களில் விமானம் தாமதம், ரத்து என அதன் செயல்​பாட்​டில் கடும் பிரச்​சினை​களை எதிர்​கொண்டு வரு​கிறது. இண்​டிகோ விமானங்​கள் நீண்ட கால​மாக சரி​யான நேரத்​தில் இயக்​கப்​பட்டு வந்த நிலை​யில் தற்​போது அதன் 35 சதவீத விமானங்​கள் மட்​டுமே குறித்த நேரத்​தில் இயக்​கப்​படு​வ​தாக செவ்​வாய்​கிழமை வெளி​யான அரசுப் புள்​ளி​விவரம் தெரிவிக்​கிறது.

இந்​நிலை​யில் நேற்று நாடு முழு​வதும் டெல்​லி, மும்​பை, பெங்​களூரு, ஹதரா​பாத் உள்​ளிட்ட நகரங்​களில் இருந்து புறப்பட வேண்​டிய சுமார் 200 இண்​டிகோ விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதனால் பயணி​கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

இதற்கு விமானிகள் உள்​ளிட்ட பணி​யாளர்​கள் பற்​றாக்​குறை முக்​கிய காரண​மாக கூறப்​படு​கிறது. விமானிகள் பணிநேர வரம்பு (எப்​டிடிஎல்) தொடர்​பான திருத்​தப்​பட்ட விதி​முறை​கள் கடந்த மாதம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இது விமானிகள் பணி நேரத்தை ஒரு நாளில் 8 மணி நேரம், வாரத்​தில் 35 மணி நேரம், ஒரு மாதத்​தில் 125 மணி நேரம் ஓராண்​டில் 1,000 மணி நேரம் வரையறுக்​கிறது.

விமானிகளுக்கு கட்​டாய ஓய்வு நேரத்​தை​யும் இது வரையறுக்​கிறது. இந்த விதி​களுக்கு ஏற்ப விமானிகளின் பணிநேரத்தை மாற்றி அமைக்க முடி​யாமல் இண்​டிகோ திணறுகிறது.

இந்​நிலை​யில் புதிய எப்​டிடிஎல் விதி​கள், சிறிய தொழில்​நுட்ப கோளாறுகள், கனமழை, பனிப் பொழிவு போன்ற வானிலை மாறு​பாடு​கள், விமானப் போக்​கு​வரத்து அமைப்​பில் ஏற்​பட்​டுள்ள நெரிசல் போன்ற காரணங்​களால் விமானங்​கள் ரத்​து, தாமதம் போன்​றவை ஏற்​பட்​டுள்​ள​தாக​வும் இதனால் பயணி​களுக்கு ஏற்​பட்ட அசவு​கரி​யங்​களுக்கு மன்​னிப்பு கோரு​வ​தா​வும்​ இண்​டிகோ நிறு​வனம்​ கூறி​யுள்​ளது.

SCROLL FOR NEXT