கலை

‘வசந்த பைரவி’யில் ஜொலித்த வாணி ராமமூர்த்தி | இசை அரங்கம்

கே.சுந்தரராமன்

சென்னை மியூசிக் அகாடமி நூற்​றாண்டை நோக்கி பயணிக்​கிறது. இங்கு தற்​போது நடை​பெற்று வரும் 99-வது இசை​விழா​வில் 80-க்​கும் மேற்​பட்ட இசை நிகழ்ச்​சிகள் நடை​பெற உள்​ளன.

சங்​கீத மும்​மூர்த்​தி​களுள் ஒரு​வ​ரான ஸ்ரீமுத்​துசு​வாமி தீட்​சிதரின் 250-வது ஜெயந்​தியை முன்​னிட்​டு, காலை நேர கருத்​தரங்​கு​களில் அவர் தொடர்​பான க்ரு​தி​களே கருப்​பொருளாக இருக்​கும்.

இசை​விழா​வின் ஒரு பகு​தி​யாக அமெரிக்​கா​வின் கலிஃ​போர்​னி​யா​வைச் சேர்ந்த வாணி ராமமூர்த்​தி​யின் இசை நிகழ்ச்சி மியூசிக் அகாட​மி​யின் டி.டி.கிருஷ்ண​மாச்​சாரி அரங்​கில் நடை​பெற்​றது.

சிறு​வயது முதல் பத்மா குட்​டி​யிடம் இசை பயிலத் தொடங்​கிய வாணி ராமமூர்த்​தி, தற்​போது ரஞ்​சனி - காயத்ரி சகோ​தரி​களிடம் இசை பயின்று வரு​கிறார். அமெரிக்​கா​வில் பயிற்​சிப் பட்​டறை​கள் நடத்தி வரு​கிறார். கச்​சேரி​யில் அவருக்கு பக்​கபல​மாக ஸ்ரேயா தேவ்​நாத் (வயலின்), கார்த்​திக் கணேஷ்​ராமன் (மிருதங்​கம்), பரத்​வாஜ் ஆர்​.சதவள்ளி (மோர்​சிங்) இருந்​தனர்.

‘சரஸிருஹான​னா’ எனத் தொடங்​கும் முகாரி ராக தியாக​ராஜ கீர்த்​தனை​யுடன் கச்​சேரியைத் தொடங்​கி​னார் வாணி ராமமூர்த்​தி. இந்​தக் கீர்த்​தனை​யில் தாமரை போன்ற முகத்​தைக் கொண்​ட​வ​ராக​வும், இன்​னல்​களில் இருந்து பக்​தர்​களைக் காத்​தருள்​பவ​ராக​வும் ராமபி​ரான் போற்​றப்​படு​கிறார்.

அடுத்​த​தாக, முத்​துசு​வாமி தீட்​சிதரின் துவிஜாவந்தி ராகத்​தில் அமைந்த ‘சேத ஸ்ரீ பால​கிருஷ்ணம்’ என்ற க்ரு​தி​யைப் பாடி​னார். பிர​தான ராக​மாக கல்​யாணி அமைந்​தது. விஸ்​தா​ர​மான ஆலாபனைக்​குப் பிறகு, கோபால​கிருஷ்ண பார​தி​யின் ‘நான் கண்​டேன் கலி தீர்ந்​தேன்’ என்ற பாடலைத் தொடங்​கி​னார்.

‘நின்​றேன் சந்​நிதி அரு​கில் நிர்​மலாம்​ருதம் உண்​டேன்’ என்ற வரி​யில் நிர​வல் செய்​து, அதற்கு ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார்.

கார்த்​திக் கணேஷ்​ராமன், பரத்​வாஜ் ஆர்​.சதவள்ளி இரு​வரும் தனி ஆவர்த்​தனத்​தில் தங்​கள் மிருது​வான வாசிப்​பில் கச்​சேரிக்கு அழகு சேர்த்​தனர்.

வசந்த பைர​வி​யில் அமைந்த ராகம் தானம் பல்​ல​வி, கச்​சேரிக்கு முத்​தாய்ப்​பாக அமைந்​தது.

கண்ட ஜாதி திரிபுட தாளத்​தில் விஷால் சாபுரா அமைத்த ‘காவபோ நாபை நீ தயராதா அஸமான தெய்​வ​மா’ என்ற பல்​லவி சிறந்த முறை​யில் கையாளப்​பட்​டது.

ராகம், தானம் ஆகிய​வற்​றில் ஸ்ரேயா தேவ்​நாத்​தின் பங்​களிப்பு குறிப்​பிடத்​தக்​கது. சதாசிவ பிரம்​மேந்​திரரின் ‘சர்​வம் பிரம்ம மயம்’ (மது​வந்தி ராகம்), அருணகிரி​நாதர் திருப்​பு​கழுடன் (முத்​தைத்​தரு) கச்​சேரியை நிறைவு செய்​தார் வாணி ராமமூர்​த்​தி.

SCROLL FOR NEXT