கலை

எழுத்தாளர் சிவசங்கரிக்கான மரியாதை அரங்கு!

செய்திப்பிரிவு

ஏறத்​தாழ 40 ஆண்​டு​களுக்கு முன் எழுதப்​பட்ட சிறு கதைகள் இன்​றைய கால​கட்​டத்​துக்​குப் பொருந்​து​மா? இதற்​குப் பதில் அளிக்​கும் வகை​யில் எழுத்​தாளர் சிவசங்​கரி​யின் 6 சிறுகதைகளுக்கு நாடக வடிவம் தந்​திருக்​கிறது தாரிணி கோமலின் ‘கோமல் தியேட்​டர்’.

கடந்த மாதம் இதன் அரங்​கேற்​றம் நடந்​தது. 2-வது முறை​யாக மயி​லாப்​பூர் ஆர்​.ஆர்​.ச​பா​வில் நேற்று முன்​தினம் இப்​படைப்பு மேடையேற்​றப்​பட்​டது. கோமல் தியேட்​டர், சிவசங்​கரி குறித்த விளக்​கக் காணொலிக்​குப் பிறகு நாடகம் தொடங்​கியது. ‘படைப்​பாளி​களைப் போற்​று​வோம்’ என்ற கருத்​தில், தமிழ் எழுத்​தாளர்​களுக்கு மரி​யாதை செலுத்​தும் வகை​யில் உரு​வாக்​கப்​பட்ட நாடகங்​களின் தொடர்ச்​சி​யாக இதன் உள்​ளடக்​கம் அமைந்​திருந்​தது. சிவசங்​கரி​யின் ‘கழுதை தேய்ந்​து’, ‘தலை​வர் வரு​கிறார்’, ‘சண்​டை’, ‘தெய்​வம் நின்று கொல்​லும்’, ‘ஆயா’, ‘தெப்​பக்​குளம்’ ஆகிய சிறுகதைகள் நாடக வடிவம் பெற்​றிருந்​தன.

‘தனக்​குப் போகத்​தான் தானம்’ என்ற சிந்​தனை​யின் பரவல், அரசி​யல் தலை​வரின் வரு​கை​யால் ஏற்​படும் மாற்​றம், தம்​ப​தி​யின் புரிதலைப் பதம் பார்க்​கும் அரட்​டை, பெண்​களைப் போகப் பொருளாக நினைப்​ப​தன் எதிர்​வினை, பிரிந்த உறவைத் தேடும் ஏக்​கம் ஆகிய​வையே இந்த நாடகங்​களில் பிர​தானக் கருப்​பொருள்.

ஐந்​தாவ​தாக வந்த ‘ஆயா' காதல் திரு​மணம் செய்​து​கொண்ட மகனின் அழைப்​பின்​பேரில் பெருநகரத்​துக்​குச் செல்​லும் ஒரு கிராமத்​துத் தாயின் அனுபவங்​களைச் சொன்​னது. மையப் பாத்​திரத்​தில் நடித்த நாஞ்​சில் ரேவதி தன் கண்​களில் நீரைப் பெருக்​கி, ரசிகர்​கள் அதைப் பிர​திபலிக்​கு​மாறு செய்​தது​தான் இதற்கு காரணம்.

‘மாமன் அடிச்​சாரோ மல்​லிகைப்பூ செண்​டாலே’ என்று தாய் தாலாட்​டுப் பாடு​கை​யில் ‘என்​னம்மா பாட்டு இது’ என்று அவரது மகன் வேண்டா வெறுப்​பாய்க் கேட்க, ‘இப்​படிப் பாடித்​தான் குழந்​தைகளை காலம்​கால​மாக தூங்க வைக்​கிறார்​கள்’ என்று அவர் பதில் அளிக்​கும் காட்சி அரங்கை சிரிப்​பில் ஆழ்த்​தி​யது.

காட்​சிப் பின்​னணி​யைச் சொல்ல, திரைச்​சீலைகளுக்​குப் பதிலாக எல்​இடி திரைகள். அவற்​றில் ‘ஏஐ’ நுட்​பத்​திலான அசைவு​கள் ‘கடி​காரச் சுழற்​சி’​யில் மீண்​டும் மீண்​டும் வந்து போயின. கதை​யின் தன்​மைக்​கேற்​றபடி, ‘கமர்​ஷியல் சினி​மா’​வின் காட்​சிகளுக்கு இசையமைப்​பது​போன்று காட்​சிகளின்​போதும் இடை​யிலும் இசையை நிறைந்​திருப்​பது நம் கவனத்தை வேறு​பக்​கம் திருப்ப அனு​ம​திக்​க​வில்​லை. சில சந்​தர்ப்​பங்​களில், தொண்​ணூறுகளில் தூர்​தர்​ஷனில் ஒளிபரப்​பான நாடகங்​களின் மீளாக்​கம் போலவே இந்த நாடகங்​கள் தோற்​றமளித்​தன.

சிவசங்​கரி​யின் வாசகர்​களை வசப்​படுத்​தும் இதன் உள்​ளடக்​கமே, அவருக்​கு மரி​யாதை செலுத்​தும்​ அரங்​காக அவ்​விடத்​தை மாற்​றியிருந்​தது.

SCROLL FOR NEXT