வேலூர் விஐடியில் ‘ரிவேரா’ கலை விழாவை தொடங்கிவைத்து, மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். உடன், பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்ளிட்டோர்.

 
கலை

வேலூர் விஐடி பல்கலை.யில் ‘ரிவேரா-2026’ கலை விழா தொடக்கம்

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் விஐடி பல்​கலை.​யில் ‘ரிவே​ரா-2026’ கலை விழா நேற்று தொடங்​கியது. விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் தலைமை வகித்​தார். இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி முன்​னாள் கேப்​டன் மிதாலி ராஜ் விழா​வைத் தொடங்கி வைத்​து, மாணவ, மாணவி​களின் கேள்வி​களுக்கு பதில் அளித்​தார்.

பல்​கலை. வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசும்​போது, “இந்​தியா உலக அளவில் முக்​கி​யத்​து​வம் பெற வேண்​டும். கல்​வி​யின் மூலம் அதை சாதிக்க வேண்​டும். விஐடி எப்​போதும் முன்​மா​திரி நிறு​வன​மாகத் திகழ்​கிறது. விஐடி மாணவர்​கள் 84 நாடு​களில் சிறப்​பாக பணி​யாற்றி வரு​கின்​றனர்.

          

கடந்த ஆண்டு 14,500 மாணவர்​களுக்கு சிறந்த நிறு​வனங்​களில் வேலை​வாய்ப்பு கிடைத்​தது. இந்த ஆண்டு இது​வரை 10,000-க்​கும் மேற்​பட்​டோர் வேலை​வாய்ப்பை பெற்​றுள்​ளனர். இது மேலும் அதி​கரிக்​கும்” என்​றார்.மிதாலி ராஜ் பேசும்​போது, “எல்​லோரும் கனவு காண்​கிறார்​கள்.

அதை நனவாக்க கடுமை​யாக உழைக்க வேண்​டும். தின​மும் சிறிது நேர​மாவது விளை​யாட்​டில் ஈடுபட வேண்​டும்” என்​றார். தொடர்ந்​து, திரைப்பட பின்​னணிப் பாடகி சுனிதி சவுஹானின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. மாரத்​தான் போட்​டி​யில் வெற்றி பெற்​றவர்​களுக்கு மிதாலி ராஜ் பரிசு வழங்​கி​னார்.

விழா​வில், விஐடி துணைத் தலை​வர்​கள் சங்​கர் விசுவ​நாதன், சேகர்விசுவ​நாதன், செயல் இயக்​குநர் சந்​தியா பென்​டாரெட்​டி, உதவி துணைத் தலை​வர் காதம்​பரி எஸ்​.​விசுவ​நாதன், இணை துணைவேந்​தர் பார்த்​த​சா​ரதி மல்​லிக், பதி​வாளர் ஜெய​பாரதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இந்த விழா மார்ச் 1-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

SCROLL FOR NEXT