கிருஷ்ணரின் மகிமைகளையும் தெய்வீக வாழ்க்கையையும் போற்றும் வகையில் ‘ராஜாதிராஜ் யாத்ரா’ எனும் பிரம்மாண்ட நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது.
தன்ராஜ் நத்வானியின் கருத்துருவாக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாடகம் பல்வேறு நகரங்களில் அரங்கேற்றப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்நாடகம் முதல் முறையாக சென்னையில் நடக்கிறது.
நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் லாஃபிங் வாட்டர் புரொடக் ஷன்ஸ், ஹோம்பாளே என்டர்டெயின்மென்ட் மற்றும் கலாநேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இதை அரங்கேற்றுகிறது. “அதிக பொருட்செலவில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட அரங்குகளோடு இசை, நடனம், விஷுவல் எஃபெக்ட்ஸ் என பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த நாடகம் திகழும்.
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள சர்முத்தா வெங்கட சுப்பா ராவ் அரங்கில் மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்நாடகம் நடக்கும்” என்று நாடகக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கான டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.