அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் தங்கள் நாட்டில் நிலவும் பிரதான பிரச்சினைகளை தீர்க்க தயராக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
டொனால்டு ட்ரம்பும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் புதன்கிழமை தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினர்.
இந்த உரையாடலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப்பை பாகிஸ்தான் வர அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு ட்ரம்ப், "பாகிஸ்தான் போன்ற அற்புதமான நாட்டுக்கு வருவதற்கு தனக்கு விருப்பமாக உள்ளது. பாகிஸ்தான் மக்கள் அற்புதமானவர்கள், அறிவானவர்கள் இந்தச் செய்தியை பாகிஸ்தான் மக்களிடம் நான் கூறியதாக தெரியப்படுத்துகள். நவாஸ் ஷெரீப் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நீங்கள் சிறப்பான பணியை செய்து கொண்டிருப்பது எல்லாவற்றிலும் தெரிகிறது" என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பற்றி பேச்சில்லை:
இந்த உரையாடலில் பாகிஸ்தான் - இந்திய எல்லையில் நிலவும் பதற்ற நிலைக் குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான கலந்துரையாடல்
இந்த உரையாடலில் எதிர்காலத்தில் அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயான உறவை பலப்படுத்துவது குறித்தும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் தனிப்பட்ட உறவை பலப்படுத்துவது குறித்தும் பேசியதாக ட்ரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னுக்கு பின் முரண்:
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற டொனால்டு ட்ரம்ப் உலகில் மிக ஆபத்தான நாடு என்று பாகிஸ்தானை குறிப்பிட்டார்.
மேலும் வானொலி நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ட்ரம்ப் பாகிஸ்தானை வட கொரியாவுடன் ஒப்பிட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
8 hours ago
தமிழகம்
3 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago