பல்கேரியாவைச் சேர்ந்த ரியான் மோர்ஸ் வளர்ச்சிக் குறைபாடு, இதயக் கோளா றுடன் பிறந்தான். 7 வயதில் மூன்றரை கிலோ எடையுடன், சிறு குழந்தையாகக் காட்சி யளித்தான். அமெரிக்காவில் வசிக்கும் டேவிட், பிரிசில்லா மோர்ஸ் தம்பதி, ஆதரவற்றவர் களுக்கான இல்லத்தில் ரியான் இருப்பதை, இணையதளம் மூலம் அறிந்தனர். உடனே ரியானை தத்தெடுக்க பல்கேரி யாவுக்குச் சென்றனர்.
“ரியான் மிக மோசமான நிலையில் இருந்தான். எடை குறைவாகவும் காணப்பட்டான். விரைவில் மரணத்தைச் சந்தித்துவிடுவான் என்றார்கள். ஆனாலும் ரியான்தான் வேண்டும் என்பதில் டேவிட்டும் நானும் உறுதியாக இருந்தோம். ரியானைத் தத்தெடுத்து, அமெரிக்காவுக்கு அழைத்து வந்தோம். மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். சில வாரங்களுக்குப் பிறகு, இனி ரியான் பிழைக்க மாட்டான் என்று கூறி வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டனர். எங்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. எப்படியாவது ரியானைக் காப்பாற்ற முடிவு செய்தோம்.
வேறொரு மருத்துவமனையில் சேர்த்து, குழாய் மூலம் சத்தான உணவுகளைச் செலுத்தினோம். சிகிச்சையும் மேற்கொண்டோம். ஏதோ அற்புதம் நிகழ ஆரம்பித்தது. ரியானின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தது. ஒரு வருடத்தில் 10.5 கிலோ எடைக்கு வந்துவிட்டான். மருத்துவர்கள் சொன்னதைத் தாண்டியும் ரியான் பிழைத்திருப்பதில் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. சின்னச் சின்ன வாக்கியங்களைப் பேசவும் ஆரம்பித்துவிட்டான். இன்னும் கொஞ்ச நாள் சிகிச்சை எடுத்துக்கொண்டால், ரியான் நோயிலிருந்து குணமாகிவிடுவான். அதற்குப் பிறகு பள்ளியில் சேர்க்க வேண்டும்” என்கிறார் பிரிசில்லா மோர்.
டேவிட், பிரிசில்லா தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். ரஷ்யாவில் இருந்து ஒரு பெண் குழந்தையை ஏற்கெனவே தத்தெடுத்திருக்கிறார்கள். ஆனாலும் ரியான் மீது இவ்வளவு அன்பு செலுத்த காரணம்? “என் அண்ணனும் ரியானைப் போல சிறப்புக் குழந்தையாகத்தான் இருந்தான். என் பெற்றோர் அவனை அவ்வளவு அக்கறையாகவும் அன்பாகவும் பார்த்துக்கொண்டனர். ஆனாலும் 9 வயதில் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டான்.
என் பெற்றோர் கொடுத்த அன்பும் அக்கறையும் ரியான் போன்ற சிறப்புக் குழந்தைக்கு நான் கொடுக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் லட்சியம். டேவிட்டும் குழந்தைகளும் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். ரியான் விரைவில் பூரணமாகக் குணம் அடையும் நாளை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்” என்கிறார் பிரிசில்லா மோர்.
சிறப்புக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க எவ்வளவு பெரிய மனம் வேண்டும்!
பிரிட்டனைச் சேர்ந்த புகைப்படக்காரர் அனுப் ஷா, இந்தோனேஷியாவில் உள்ள டாங்கோகோ தேசியப் பூங்காவில் Black crested macaques என்ற குரங்குகளைப் படம் எடுத்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் குரங்குகள் அவ்வளவு சந்தோஷமாகத் தங்கள் முகத்தைக் காட்டியிருக்கின்றன. “இதுபோன்று கேமராவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் விலங்குகளைப் பார்த்ததில்லை. மனிதர்களைப் போலவே புகைப்படங்கள் எடுப்பதற்கு அவ்வளவு ஆர்வம் காட்டின. 4 வாரங்கள் இந்தப் பணியை மேற்கொண்டேன். ஒருமுறை கூட ஒத்துழைக்க மறுக்கவில்லை. கேமராவைப் பார்த்தவுடன் சிரித்துக்கொண்ட நின்றுவிடுகின்றன” என்கிறார் அனுப் ஷா.
கேமராவுக்கு போஸ் கொடுக்கும் குரங்குகள்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
கல்வி
17 mins ago
விளையாட்டு
27 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago
விளையாட்டு
2 hours ago