இந்தியாவுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமுக தீர்வு காண பாகிஸ்தான் விருப்பம்

By பிடிஐ

காஷ்மீர் உட்பட இந்தியாவுடன் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகத் தீர்வு காணவே பாகிஸ்தான் விரும்புகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஸகாரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து இஸ்லாமாபாத்தில் அவர் கூறியதாவது:

இந்தியாவுடனான பிரச்சினைகளில் முக்கியப் பங்கு வகிப்பது காஷ்மீர் விவகாரமே. நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண சர்வதேச நாடுகள் உரிய பங்காற்ற வேண்டும். காஷ்மீர் உட்பட இந்தியாவுடன் நிலுவையில் இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகத்தீர்வு காண பாகிஸ்தான் விரும்புகிறது.

காஷ்மீரில் இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை கடுமையாக, தொடர்ந்து மீறி வருகிறது. அதேபோல் சிந்து நதி உடன்படிக்கை விவகாரத்தில் ஒரு நாடு ஏகமனதாக முடிவெடுக்க முடியாது.

இது குறித்து இந்தியாவின் நடவடிக்கைகளை நாங்கள் மதிப்பிட்டு வருகிறோம். இதற்கு முன்பும் நதிநீர் விவகாரம் எழுந்துள்ளது, அப்போதெல்லாம் சுமுகத் தீர்வே காணப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

வணிகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்