வடகொரியாவின் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி

By ஏஎஃப்பி

வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த வாரத்தில் வடகொரியா நடத்திய இரண்டாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.

வடகொரியா இன்று (வியாழக்கிழமை) நடத்திய, இலக்கை மிதமான வேகத்தில் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை சோதனை தோல்வியடைந்ததாக தென்கொரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தென்கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், "வடகொரியாவின் சமீபகால செயல்பாடு உலகையே அச்சுறுத்தும் வகையில் உள்ளது" என்று கூறினார்.

முன்னதாக, அமெரிக்காவின் குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை தாக்கும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனையை வடகொரியா திங்கட்கிழமை நடத்தியது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஐ.நா.சபை உள்ளிட்டவை தங்களது கண்டனத்தை தெரிவித்தன. இந்த நிலையில் மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

51 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்