கடும் வறட்சியால் பஞ்சத்தில் மடியும் மக்கள்: துருக்கியிடம் உதவி கேட்கும் சோமாலியா

By செய்திப்பிரிவு

அங்காரா: சோமாலியாவில் கடுமையான வறட்சி நிலவுவதைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ஹசன் ஷேக் முகமது, துருக்கியிடம் உதவ வேண்டி ஆதரவு கேட்டிருக்கிறார்.

சோமாலிய அதிபர் ஹசன் ஷேஷ் முகமது முதல் முறையாக துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: ”சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சி குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது. துருக்கிய சகோதரர்கள் எங்களுக்கு உறுதுணைபுரிய வேண்டும். அவர்கள் முன்பு செய்த உதவிகளை போல, அவர்களால் முயன்ற உதவியை செய்ய வேண்டும். உங்களது ஆதரவு சோமாலிய மக்களின் உயிர்களைக் காப்பாற்றும். நான் இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்” என்றார்

இந்த நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன், சோமாலியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு துருக்கி என்றும் உதவும் என்று தெரிவித்திருக்கிறார்.

கடும் வறட்சி: கடந்த சில மாதங்களாகவே சோமாலியாவின் பல பகுதிகள் வறட்சி நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சோமாலியாவுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி உதவிகள் கிடைக்கவில்லை. இதனால் சோமாலியாவில் நிலைமை மிக மோசமாகியுள்ளது.

40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியால் சோமாலியாவில் லட்சக்கணக்கான மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொண்டுள்ளனர். சுமார் 43 லட்சம் மக்கள் உணவு, தண்ணீர், இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர்.

ஆப்பிரிக்க கண்டத்தின் கொம்பு பகுதியில் அமைந்துள்ள சோமாலியாவில், நிலையான அரசு அமையாதது, தொடர்ந்து நடந்து வரும் உள்நாட்டுச் சண்டைகள், மழையின்மை ஆகியவை கடும் வறட்சிக்கு காரணமாகியுள்ளன. இதில் தெற்கு சோமாலியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம்தான் கடும் வறட்சிக்கு எதிராக சோமாலியா அரசு அவசர நிலையை அறிவித்தது. எனினும் 5 மாதங்கள் கடந்தும் சோமாலியாவில் நிலைமை சீராகவில்லை.

கடந்த சில வருடங்களில் மட்டும் சோமாலியாவில் இரண்டரை லட்சம் பேர் பட்டினியால் மடிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கவும் வாய்ப்புண்டு.

உதவும் துருக்கி: கடந்த 2011 ஆம் ஆண்டு துருக்கி அதிபர் எர்டோகன், சோமாலியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தை தொடர்ந்து சோமாலியாவின் பொருளாதாரத்திற்கு துருக்கி பெருமளவு உதவி செய்து வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சோமாலியாவுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் துருக்கி 1 பில்லியன் டாலர் வழங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

54 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்