இந்தியா சார்பில் இலங்கைக்கு மேலும் 40 ஆயிரம் டன் டீசல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியும் எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து அரிசி, பால் பவுடர், மருந்துப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இந்தியாவில் இருந்து பல தவணைகளாக பெட்ரோல், டீசலும் அனுப்பப்பட்டது. கடந்த 21-ம் தேதி 40,000 டன் டீசலை இந்தியா அனுப்பி வைத்தது.

இந்நிலையில், இலங்கைக்கு மேலும் 40,000 டன் டீசலை கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. அந்தக் கப்பல் நேற்று முன்தினம் மாலை கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது. இதை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்