அமெரிக்க குடியரசு கட்சி வேட்பாளர் டோனால்டு டிரம்பின் பிரச்சார கூட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மெக்ஸிகோ நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் மெக்ஸிகோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஊடுருவி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த விவகாரம் முக்கிய பிரச்சினையாக விவாதிக்கப்படுகிறது. குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கு போட்டியிடும் டொனால்டு டிரம்ப், மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன், ஊடுருவலை தடுக்க எல்லையில் சுவர் எழுப்புவேன் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கலிபோர்னியாவின் கோஸ்டா மெஸா பகுதியில்டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆயிரக்கணக்கானோர் டிரம்புக்கு எதிராக திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். பலர் காயமடைந்தனர். போலீஸ் கார் சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
உலகம்
4 hours ago
வாழ்வியல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
7 hours ago