அமெரிக்காவின் கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் இருந்து 1,000 ஆண்டு பழமையான இரு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் ரூ. 3 கோடி மதிப்புள்ள அந்த கற்சிலைகள் 8 மற்றும் 10-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என கூறப்படுகிறது. இந்தியாவின் ராஜஸ்தான் அல்லது மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து அந்த கற்சிலைகள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதில் ஒரு கற்சிலை ஜெயின மதத்தின் முதல் தீர்த்தங்கரரை உருவகப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.1 கோடி என்றும், மற்றொரு சிலை ரூ. 2 கோடி மதிப்பு பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் இவ்விரு சிலைகளும் வரும் 15-ம் தேதி நடக்கவுள்ள ஏலத்துக்காக வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான தகவல் கிடைத்ததும் அந்த சிலைகளை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில் இன்டர்போல் போலீஸாரும், அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பினரும் இணைந்து கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் இருந்து அந்த சிலைகளை மீட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
3 mins ago
இந்தியா
19 mins ago
தமிழகம்
30 mins ago
ஓடிடி களம்
47 mins ago
விளையாட்டு
54 mins ago
கல்வி
1 hour ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago