சிரியாவில் போர் நிறுத்தம் அமல் செய்யப்படும் என்று அமெரிக் காவும் ரஷ்யாவும் கூட்டாக அறிவித்துள்ளன.
சிரியாவில் கடந்த 5 ஆண்டு களாக உள்நாட்டுப் போர் நடை பெற்று வருகிறது. அந்த நாட்டு அதிபர் ஆசாத், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு உட்பட பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் போரில் ஈடுபட்டு வருகின்றன.
சிரியாவின் பெரும் பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு அடுத்து அல்-காய்தா ஆதரவு அமைப்பான அல்-நஸ்ரா முன்னணியின் கட்டுப் பாட்டில் கணிசமான பகுதி உள்ளது.
இவை தவிர சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் அலெப்போ உள் ளிட்ட முக்கிய நகரங்கள் உள்ளன. மிதவாத எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்கா, துருக்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா, ஈரான் உள் ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக் கின்றன.
கடந்த சில மாதங்களாக ரஷ்ய விமானப் படை சிரியாவில் முகாமிட்டு அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அண்மை காலமாக ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கட்டுப் பாட்டில் உள்ள அலெப்போ நகரை ஆசாத் படைகள் சுற்றிவளைத்து முன்னேறி வருகின்றன. அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் சிரியா உள்நாட்டுப் போர் குறித்து ஜெர்மனியின் முனிச் நகரில் அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதன்பின்னர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
சிரியாவில் போர் நிறுத்தத்தை அமல் செய்ய உடன்பாடு எட்டப் பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அங்கு போர் நிறுத்தம் அமலுக்கு வரும். எனினும் ஐ.எஸ். தீவிர வாதிகள், அல்-காய்தா ஆதரவு அமைப்பான அல்-நஸ்ரா முன்னணி தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தொடரும். போர் நிறுத்தத்தை அனைத்து தரப்பும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago