இங்கிலாந்தில் தளர்வுகள்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

By செய்திப்பிரிவு

மருத்துவ நிபுணர்களின் எச்சரிகைக்கு மத்தியில் இங்கிலாந்தில் முழுமையான தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று டெல்டா வைரஸ் காரணமாக அதிகரித்த நிலையில் சற்று குறைந்தன. இந்த நிலையில் இங்கிலாந்தில் முழுமையாக கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன

இதனைத் தொடர்ந்து பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடையில்லை, இரவு நேர மதுபான விடுதிகளுக்கு அனுமதி போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த தளர்வுகள் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இந்த நிலையில், முழுமையான கட்டுப்பாடுகளை தளர்த்துவது எதிர்காலத்தில் தொற்றை அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.

பிரிட்டனைப் பொறுத்தவரை 60% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக பிரிட்டன் நாட்டு சுகாதார செயலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிரிட்டன் சுகாதார செயலர் சாஜித் ஜாவித். இவர் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இவருக்கு கரோனா தொற்று உறுதியாகியது. மேலும் சாஜித் ஜாவித்தை சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்ததால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா முதல் அலையின்போது போரிஸ் ஜான்சன் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்