ரஷ்யாவில் 5-வது நாளாக கரோனா பலி அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 697 பேர் கரோனாவுக்கு பலியாகினர். தொடர்ந்து 5-வது நாளாக கரோனா பலி எண்ணிக்கை அங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “ தொடர்ந்து 5-வது நாளாக ரஷ்யாவில் கரோனா பலி அதிகரித்து வருகிறது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 697 பேர் கரோனாவுக்கு பலியாகினர். ரஷ்யாவில் கடந்த 29 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 600 பேருக்கும் அதிகமானோர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்றார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ கரோனாவின் மையமாக மாறி உள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யா ஆறாவது இடத்தில் உள்ளது. கரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்திவருவதே கரோனா பரவலுக்குக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன.

ஸ்புட்னிக் கரோனாவுக்கு எதிராக 91.6% சிறப்பாகச் செயலாற்றக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்