சிங்கப்பூரில் அடுத்த வாரம் முதல் தளர்வுகள்

By செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் கரோனா குறைந்து வருவதால் அங்கு அடுத்த வாரம் முதல் தளர்வுகள் அறிமுகப்படுபட உள்ளன.

இதுகுறித்து சிங்கப்பூர் ஊடகங்கள் தரப்பில், “ சிங்கப்பூரில் ஊரடங்கு ஜூன் 14 தேதி முதல் முடிவடைகிறது. கடந்த சில நாட்களாக கரோனா தொற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த வாரம் முதல் தளர்வுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தளர்வுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும். தளர்வுகளில் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த மாதம் கரோனா தொற்று அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை அறிவித்தபின்னர் தற்போது கரோனா கட்டுக்குள் வந்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

கரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்