ஒரே டோஸ் தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை பிரிட்டன் வழங்கியுள்ளது.
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், கரோனா தடுப்பூசியை வேகமாகச் செலுத்தும் பணியை பிரிட்டன் அரசு முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டனில் அஸ்ட்ராஜெனகா, பைஸர், மாடர்னா ஆகிய கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுத்த நிலையில், தற்போது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “நமது தடுப்பூசி திட்டத்திற்கு உந்துதல் அளிக்கும் செய்தி இது. அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஒரு டோஸ் (ஜான்சன் & ஜான்சன்) தடுப்பூசிகள் வைரஸிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் காரணமாக பிரிட்டனில் சமீபநாட்களாகத் தொற்று அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் பிரிட்டன் அரசு இறங்கியுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
44 mins ago
ஜோதிடம்
48 mins ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
9 hours ago
வாழ்வியல்
10 hours ago
தமிழகம்
10 hours ago