பிரேசிலில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,50,000-ஐ தாண்டியது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 73,453 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,194,209 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 2,173 பேர் பலியாக கரோனவினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,52,031 ஆக அதிகரித்துள்ளது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் ஜனவரி முதலே கரோனா அதிகரித்து வந்தது. சில நாட்கள் கரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் கரோனா பாதிப்பு பிரேசிலில் அதிகரித்துள்ளது. பிரேசிலில் இதுவரை 18% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் , பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 34 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago