அபாரிஜின் இனத்தைச் சேர்ந்த பிரபல ஆஸ்தி ரேலிய நடிகர் ஜாக் சார்லஸிடம் வழக்கத்துக்கு மாறாக “முதலில் கட்டணத்தைக் கொடுத் தால்தான் டாக்ஸியில் ஏற்றுவேன்” என்று ஒரு டாக்ஸி ஓட்டுநர் கூறிய தாக அறிவித்ததைப் பார்த்தோம்.
அவர் அவமானப்படுத்தப் பட்ட அடுத்த நிகழ்ச்சியும் மெல்போர்னில் தான் நடைபெற்றது.
விமான நிலையத்தில் வரிசை யில் வந்த டாக்ஸிகளில் ஒன்றில் இவர் ஏறப்போனபோது, இவரை ஏற இறங்கப் பார்த்த அந்த டாக்ஸி ஓட்டுநர் இவரை ஏற்றிக் கொள்ளா மலேயே சென்று விட்டாராம்.
இந்த நிகழ்ச்சிகள் பற்றி சமாளிப்பு விளக்கங்கள் வெளியாகியுள்ளன. “நாங்கள் இதை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்றது டாக்ஸி சேவை அமைப்பு.
“இரவு 10.00 மணியிலிருந்து காலை 5.00 மணிக்குள் டாக்ஸியில் செல்ல வேண்டுமென்றால், வண்டி யில் ஏறும்போதே குறிப்பிட்ட தொகையை யாராய் இருந்தாலும் கொடுத்துவிட வேண்டும். இது தான் ஆஸ்திரேலியாவில் பழக்கம்” என்றும் கூறுகிறது அந்த அமைப்பு. ஆனால் முதல் நிகழ்ச்சியில் தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் இரவு ஒன்பது மணிக்கு என்பதற்கு சான்று வைத்திருக்கிறார் சார்லஸ்.
ஆனால் சில ஆஸ்திரேலிய டாக்ஸி ஓட்டுநர்கள் அபாரிஜின் களைக் கண்டால் நிறுத்தாமல் செல்வது வழக்கமாகி விட்டது. முன் பின் தெரியாத வெள்ளையர்களிடம் வேண்டுகோள் விடுத்து அவர்கள் மூலம் டாக்ஸியை நிறுத்தச் செய்து அதில் ஏறிச் செல்ல வேண்டிய அவல நிலையும் பல இடங்களில் தோன்றிவிட்டதாம்.
அபாரிஜின்களுக்கான முழுமை யான சமத்துவம் கிட்டவில்லை யென்றாலும் கூட வேறொரு விதத்தில் தன் தனித்துவத்தை நிலைநாட்ட ஆஸ்திரேலியா முயன்று கொண்டிருக்கிறது. அது பிரிட்டனின் பிடியிலிருந்து மேலும் விடுபடுவதுதான்.
பல வருடங்களுக்கு முன்பே ஹென்றி லாசன் என்பவர் எழுதிய ‘குடியரசின் கீதம்’ என்ற பாடலை ஆஸ்திரேலியாவின் தேசிய கீதமாக எடுத்துக் கொள்ளலாமா அல்லது ஏற்கெனவே பிரிட்டிஷ் மகாராணியின் புகழ் பாடும் தேசிய கீதத்தைத் தொடரலாமா என்பது குறித்து விவாதங்கள் நடைபெறத் தொடங்கின என்று குறிப்பிட்டோம். இப்போது அந்த விவாதம் மீண்டும் கிளம்பியுள்ளது.
ஆஸ்திரேலிய அரசு Knights மற்றும் Dames போன்ற விருதுகளை இனி வழங்காது என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இவற்றை பிரிட்டிஷ் குடிமகன்களுக்கோ, பிரிட்டனுக்கு மேன்மையளித்த சாதனையாளருக்கோ வழங்குவது வழக்கம். Knight என்ற விருதை ஆண்களுக்கும், Dame என்ற விருதைப் பெண்களுக்கும் வழங்குவது வழக்கம்.
இதற்குமுன்பு ஆஸ்திரேலிய பிரதமராக இருந்தவர் இந்த விருதை இளவரசர் பிலிஃப்புக்கு வழங்க முடிவெடுத்தார். டோனி அபோட் என்ற அந்தப் பிரதமரின் முடிவு மக்களில் பலருக்கும் கடும் அதிருப்தியைத் தந்தது.
அடுத்த பிரதமராகி இருக்கும் மால்கம் டர்ன்புல் இனி இது போன்ற விருதுகளை ஆஸ்தி ரேலியா வழங்காது என்று அறிவித் திருக்கிறார். இது தொடர்பான ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பரிந்துரைகளை மகாராணி எலிச பெத்துக்கு இவர் அனுப்ப, அவரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
“இனி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாதனையாளர்கள் மட்டுமே இப்படி அரசால் கவுரவிக்கப்படு வார்கள்” என்கிறார் பிரதமர். அதே சமயம் ஏற்கெனவே கவுரவிக்கப் பட்டவர்களின் விருதுகள் திரும்பப் பெறப்பட மாட்டாது என்றும் உறுதி அளித்திருக்கிறார். எதிர்க் கட்சிகளும் இதை வரவேற்றிருக் கின்றன.
இந்த விருதுகள் பற்றிய சில கடந்த கால விவரங்களையும் பார்ப்போமே..!
1975-ல் ஆஸ்திரேலிய அரசு ‘கவுரவிக்கும் விருதுகளை’ அறிமுகப்படுத்தியது. அதற்கு அடுத்த ஆண்டு மால்கம் ஃப்ரேசர் என்பவர் தலைமையில் அமைந்த அரசு மேலே குறிப்பிட்ட நைட்ஸ், டேம்ஸ் விருதுகளை அறிமுகப்படுத்தியது. 1986-ல் பிரதமராக இருந்த பாப் ஹாக் இந்த விருதுகளை நிறுத்தி வைத்தார். 2014-ல் பிரதமராக இருந்த டோனி அபோட் இந்த விருதுகளை மீண்டும் அறிவித்தார்.
காமன்வெல்த் நாடுகள் என்பவற்றில் ஒரு காலத்தில் பிரிட்டனால் ஆட்சி செய்யப்பட்ட நாடுகள் அடக்கம். சுதந்திரம் பெற்ற பிறகு தங்கள் நாட்டு மக்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கும் வகையில் சட்டங்களை பல நாடுகள் மாற்றி அமைத்துக் கொண்டன. கனடா, ஆண்டிகுவா, பிர்படோஸ் ஆகிய நாடுகள் அமைந்த இந்தப் பட்டியலில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் கூட உண்டு.
எனினும் பிரிட்டன் மகாராணியை தங்கள் நாட்டின் கவுரவத் தலைவி யாக ஏற்க கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை ஒப்புக் கொண்டுள்ளன.
(உலகம் உருளும்)
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஆன்மிகம்
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago