கரோனா அதிகரிப்பு: தடுப்பூசிகளை செலுத்துவதில் சவுதி தீவிரம்

By செய்திப்பிரிவு

சவுதி அரேபியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 985 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை தரப்பில், “ நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 985 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,86,102 ஆக அதிகரித்துள்ளது. 6,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

சவுதியில் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்வதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்புக் காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் 13 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

5 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்