மியான்மர் போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் தரப்பில், “அனைவரையும் எங்கள் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறோம். இதழியல் என்பது குற்றச் செயல் அல்ல. மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தைப் பதிவு செய்ததால் கைது செய்யப்பட்ட தெய்ன் ஸா உள்ளிட்ட 5 பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தெய்ன் ஸா உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் பொது சட்ட விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மியான்மர் ராணுவத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மியான்மரில் இளம் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் இதுவரை 50க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
என்ன நடக்கிறது மியன்மரில்?
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
40 mins ago
சினிமா
3 hours ago
இந்தியா
48 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
33 mins ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
வணிகம்
9 hours ago