கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பு மருந்து தற்போது இல்லை: சவுதி

By செய்திப்பிரிவு

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பு மருந்து தற்போது இல்லை என்று சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .

இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ சவுதியில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்து வருகிறது.

நாட்டின் 350 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுளோம். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தற்போது கரோனா தடுப்பு மருந்து இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கரோனா வைரஸால் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர், ஜான்சன் & ஜான்சன் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்