பிலிப்பைன்ஸில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

பிலிப்பைன்ஸில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணியை அந்நாடு தற்போது தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், ''முதல் கட்டமாக சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்து 6 மருத்துவமனைகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தற்போதுவரை சீனாவிலிருந்து வழங்கப்பட்ட சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்தைத்தான் நாங்கள் பெற்றுள்ளோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஹாரி கூறும்போது, “கரோனா தடுப்பு மருந்து நாட்டிலேயே முதல் முறையாக உங்களுக்குத்தான் போடப்பட்டுள்ளது. நீங்கள்தான் (சுகாதாரப் பணியாளர்கள்) ஹீரோ” என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.

சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்