பிரிட்டனில் மார்ச் 8 முதல் பள்ளிகள் திறப்பு

By செய்திப்பிரிவு

மார்ச் 8-ம் தேதி முதல் பிரிட்டனில் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.

இதுகுறித்து பிரிட்டன் பத்திரிகைகள், “பிரிட்டனில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ச் 8 ஆம் தேதி முதல் பிரிட்டனில் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு மார்ச் 29ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், வரும் மாதங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல குறைக்கப்பட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

பள்ளிகள் திறக்கப்படும் முடிவுக்கு பிரிட்டனில் பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், வரும் 29ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்ற உரையில் போரிஸ் ஜான்சன் நிறைய அறிவிப்புகளை அறிவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் 40 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

21 mins ago

க்ரைம்

27 mins ago

க்ரைம்

36 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்