லெபனானில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

லெபனானில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “லெபனானில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் செலுத்தப்பட்டு வருகிறது. முதல் முதலாக மருத்துவர் மற்றும் நடிகர் ஒருவருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சுமார் 20,000க்கும் அதிகமானவர்களுக்கு பைஸர் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவே உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் 44 நாடுகளிலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் 15 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.

மேலும், பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பரவும் கரோனா வைரஸ் விரைவாக உருமாற்றம் அடைவதால் அவை உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உலக நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் பலரும் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து, உருமாற்றம அடைந்த கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகப் பலனளிப்பதாக உலக நாடுகள் பலவும் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்