பிரிட்டனில் இரண்டாவது கட்டமாக ஆசிரியர்கள், போலீஸாருக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் மருத்துவக் குழு தரப்பில், “பிரிட்டனில் இரண்டாவது கட்டமாக ஆசிரியர்கள், போலீஸார், வணிகர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கு அடுத்து இவர்களுக்குச் செலுத்துவது முக்கியமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிராக மாடர்னா தடுப்பு மருந்து சிறப்பாகச் செயல்படுவதாக பிரிட்டன் அரசு சமீபத்தில் தெரிவித்தது. அங்கு சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது.
பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய வகை கரோனா வைரஸ், ஏற்கெனவே இருக்கும் கரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரிட்டனுக்கான விமானச் சேவையை 40க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago