நெதர்லாந்தில் செவிலியர் ஒருவருக்கு முதல் முதலாக கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெதர்லாந்து சுகாதார அமைச்சகம் தரப்பில், “சன்னா எல்காதிரி என்ற 39 வயதான செவிலியருக்கு முதல் முதலாக கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இவருக்கு பைசர் கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டது. விரைவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களாக ஸ்விட்சர்லாந்து மருத்துவக் குழு நடத்திய ஆய்வில், பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருப்பதாகவும், நல்ல பலனைத் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு கரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்குச் செலுத்தப்பட உள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, சவூதி , பிரிட்டன், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 8.5 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 mins ago
ஜோதிடம்
22 mins ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஓடிடி களம்
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago