சவுதி கரோனா தொற்றை சிறப்பாக எதிர்கொள்கிறது: ஜெர்மனி தூதர்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றை சவுதி அரேபியா அரசு சிறப்பாக எதிர் கொள்கிறது என்று ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதிக்கான ஜெர்மனி தூதர் ஜார்ஜ் ரானாவு கூறும்போது, “நான் சவுதியில் இருப்பதை நினைத்து பெருமைக் கொள்கிறேன். பிற நாடுகளை ஒப்பிடும்போது சவுதியில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சவுதி மற்றும் சவுதி அமைச்சர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

சவுதிக்கு இம்மாதத்தில் பைசர் கரோனா தடுப்பு மருந்து வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து சவுதி கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவால் உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்