டென்மார்க்கில் 33 பேருக்குப் புதிய வகை கரோனா

By செய்திப்பிரிவு

டென்மார்க்கில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு 33 பேருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டென்மார்க் சுகாதாரத் துறை தரப்பில், “பிரிட்டனிலிருந்து பரவி வரும் உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் பாதிப்பு 33 பேருக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்டறியும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்க்ப்பட்டுள்ள்து.

டென்மார்க்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸால் உலக நாடுகளை மீண்டும் பீதி தொற்றிக் கொண்டுள்ளது. இதன் காரணமாக 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைக்குத் தடை விதித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

54 mins ago

ஜோதிடம்

59 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்