ஆப்கானிஸ்தானில் ஃபார்யப் மாகாணத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் ஃபார்யப் மாகாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
காபூல், கோஸ்ட் ஆகிய நகரங்களிலும் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவங்களிலும் பலர் காயம் அடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், தலிபான்கள் இந்தத் தாக்குதல்களை நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது.
மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் அமெரிக்கப் படைகள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. தலிபான்களைத் தவிர்த்து ஐஎஸ் தீவிரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
வாழ்வியல்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago