தாய்லாந்து: சந்தையில் மீண்டும் பரவும் கரோனா

By செய்திப்பிரிவு

தாய்லாந்தில் கடற்சார் உணவு பொருட்கள் சந்தையில் ஏற்பட்ட கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தாய்லாந்து ஊடகங்கள் தரப்பில்,” தாய்லாந்தில் மிகப் பெரிய கடற்சார் உணவு பொருட்கள் சந்தையில் 67 வயதான இறால் விற்பனையாளர் ஒருவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.ஞாயிற்றுக் கிழமை மட்டும் சந்தையோடு தொடர்புடைய 689 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்தை மூடப்பட்டு கரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 10,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சவுதி ஆகிய நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்