கரோனா: டென்மார்க்கில் ஊரடங்கு நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து டென்மார்க்கில் ஊரடங்கை நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்“ டென்மார்க்கில் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த பத்து நாட்களாக 4,000 பேர்வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து டென்மார்க்கில் கரோனாவைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதில் ஒருபகுதியாக ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. மதுபானங்கள், அருங்காட்சியகங்கள், உணவு விடுதிகள் ஆகியவை மூட அரசு திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து ரஷ்யா, அமெரிக்கா , பிரிட்டன் ஆகிய நாடுகள் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தத் தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்