கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து டென்மார்க்கில் ஊரடங்கை நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்“ டென்மார்க்கில் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த பத்து நாட்களாக 4,000 பேர்வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து டென்மார்க்கில் கரோனாவைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதில் ஒருபகுதியாக ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. மதுபானங்கள், அருங்காட்சியகங்கள், உணவு விடுதிகள் ஆகியவை மூட அரசு திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து ரஷ்யா, அமெரிக்கா , பிரிட்டன் ஆகிய நாடுகள் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தத் தொடங்கியுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தொழில்நுட்பம்
10 hours ago
சினிமா
11 hours ago
க்ரைம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago