கரோனா தடுப்பு மருந்தை நாட்டு மக்களுக்குச் செலுத்துவதற்கான பதிவை சவுதி அரேபிய அரசு தொடங்கியது.
இதுகுறித்து சபுட்கி அரேபிய அரசு ஊடகம் தரப்பில், “நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதற்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தை முதலில் செலுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
சவுதியில் இதுவரை 3,60,013 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,059 பேர் பலியாகி உள்ளனர். 3,50,792 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், பரவலைத் தடுக்கும் பொருட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மசூதிக்குள் யாத்ரீகர்களையும், உள்ளூர் மக்களையும் தொழுகை நடத்த சவுதி அரேபிய அரசு அனுமதிக்கவில்லை. புனிதப் பயணம் வரும் வெளிநாட்டு மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. புனித ரமலான் பண்டிகையன்றுகூட மக்கள் யாரையும் தொழுகை நடத்த அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து, அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இந்த நிலையில் பொது மக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணியில் சவுதி அரசு இறங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
இந்தியா
23 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago