அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்தில் கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்: ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்தில் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “அமெரிக்காவில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம்.

சுகாதாரப் பணியாளர்களும், மூத்த குடிமக்களும் முதலில் கரோனா தடுப்பு மருந்துகளைப் போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் கரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக 2 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துக்குப் பிறகு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியது போன்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

44 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்