நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற இன்னும் சில தூரம் உள்ளது: உலக சுகாதார அமைப்பு

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு மருந்து வாயிலாக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற இன்னும் சில தூரம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளில் ஒருவரான மார்க்ரெட் ஹாரிஸ் கூறும்போது, “கரோனா வைரஸை முற்றிலுமாக ஒழிப்பதற்குப் பொது சுகாதார நடவடிக்கைகளே முக்கியம். தடுப்பூசிகள் ஒரு சிறந்த கருவி. அவை மிகவும் உதவியாக இருக்கும். தற்போதைய கரோனா தடுப்பு மருந்துகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு இன்னும் சில தூரம் உள்ளது” என்றார்.

முன்னதாக, கரோனா வைரஸுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தடுப்பூசி முகாமை பிரிட்டன் அரசு தொடங்கியுள்ளது. பைஸர்-பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கரோனா தடுப்பு மருந்து 95 சதவீதம் கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்தது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்