பாகிஸ்தானில் அதிகபட்சமாக ஒரே நாளில் கரோனாவுக்கு 89 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார அமைப்பு கூறும்போது, “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கை 8,487 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 2,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பல நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. மேலும், பொதுமக்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
17 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago