மெக்சிகோவில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவுக்கு 11.56,770 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,127 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனாவுக்கு 11,56,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,08,863 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மெக்சிகோவில் இதுவரை கரோனாவுக்கு 2,000க்கு அதிகமான சுகாதார பணியாளர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மெக்சிகோ அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கரோனா இறப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் மெக்சிகோ உள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பலவகையான தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
தடுப்பூசி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கையில், பல நாடுகளும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago