ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கனடா அரசுத் தரப்பில், “கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இது கடினமான காலம். இதன் காரணமாக ஜனவரி மாதம் முதல் நாங்கள் கரோனா தடுப்பு மருந்துகளை மக்களுக்குச் செலுத்த இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஏற்பாடுகள் டிசம்பர் 14-ம் தேதி முதல் தொடங்கும் என்று கனடா அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கனடாவில் கரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அங்கு பல நாடுகளுக்குப் பயணத் தடை நீடிக்கிறது.
கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் பல நிறுவனங்களின் முடிவுகள் சாதகமாக வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 mins ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago