மெக்சிகோவில் கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத்துறை தரப்பில், “மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 576 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,00,104 ஆக அதிகரித்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நேற்று கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா இறப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் மெக்சிகோ உள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
30 mins ago
தொழில்நுட்பம்
1 hour ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
இந்தியா
4 hours ago