ஜப்பானில் கரோனா தொற்று: 1,17,799 பேர் பாதிப்பு

By செய்திப்பிரிவு

ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,434 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத் துறை தரப்பில், “ ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,434 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 243 பேருக்கு கடுமையான கரோனா அறிகுறிகள் உள்ளன. ஜப்பானில் இதுவரை 1,17,799 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிகக்ப்பட்டுள்ளது.

டோக்கியாவில்தான் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 200 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டோக்கியோவில் சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

59 mins ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்