பிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,76,935 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 1,761 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், “பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 1,761 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,76,935 ஆக அதிகரித்துள்ளது. 7,147 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் இந்தோனேசியாவுக்கு அடுத்து பிலிப்பைன்ஸில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை 4 கோடிக்கும் அதிகமானவர்கள் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

இதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன. ஆனால், கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 mins ago

வாழ்வியல்

11 mins ago

ஜோதிடம்

37 mins ago

க்ரைம்

27 mins ago

இந்தியா

41 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்