ஈரானில் கரோனா தொற்று, பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 6,968 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 346 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,81,824 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 33,299 ஆக அதிகரித்துள்ளது.
சமீப நாட்களாக ஈரானில் கரோனா பரவல் மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிழக்குப் பகுதி கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
59 mins ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
வாழ்வியல்
10 hours ago
தமிழகம்
10 hours ago