சீனாவிடமிருந்து கரோனா தடுப்பு மருந்தை வாங்கப் போவதில்லை: பிரேசில்

By செய்திப்பிரிவு

சீனாவிடமிருந்து கரோனா தடுப்பூசி வாங்க போவதில்லை என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து சுமார் 46 மில்லியன் டோசஸ் கரோனா தடுப்பு மருந்துகளை பரிசோதனைக்காக பிரேசில் வாங்க இருந்தது. இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்தை வாங்க போவதில்லை என்று பிரேசில் அதிபர் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கூறும்போது, “ பிரேசில் மக்கள் பரிசோதனைக்கு அல்ல. நாங்கள் சீனாவின் தடுப்பு மருந்துகளை வாங்க போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பில் பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது. பலி எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்

இந்த நிலையில் மீண்டும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

இந்தியா

42 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

51 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்